இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட 20க்கு 20 தொடரை மேற்கிந்தியத் தீவுகள் அணி 2-1 என்ற அடிப்படையில் வென்றது.
கிங்ஸ்டனில் இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தெடுப்பை தேர்வு செய்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி
20 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 169 ஓட்டங்களை பெற்றது.
இதையடுத்து 170 என்ற வெற்றிலக்கை நோக்கி பதிலளித்தாடிய மேற்கிந்திய தீவுகள்
அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது.



