Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இலங்கைக்கு வெளிநாட்டு பண வரவு உயர்வு!

இலங்கைக்கு வெளிநாட்டு பண வரவு உயர்வு!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, வெளிநாட்டுத் தொழிலாளர் பணப்பரிமாற்றத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களிடமிருந்து 729 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்குக் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இது கடந்த 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் (548.1 மில்லியன் டொலர்) ஒப்பிடுகையில் 180.9 மில்லியன் அமெரிக்க டொலர் அல்லது சுமார் 33 சதவீத வளர்ச்சியாகும்.

கடந்த ஜனவரி மாதத்தில் 751.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாகப் பதிவாகியிருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது பெப்ரவரி மாதத்தில் பணப்பரிமாற்றத்தில் சிறிய அளவிலான வீழ்ச்சி காணப்பட்டாலும், வருடாந்த அடிப்படையில் இது ஒரு பாரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

2026 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் (ஜனவரி மற்றும் பெப்ரவரி) மொத்தமாக 1.48 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றமாக இலங்கைக்குக் கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 32 சதவீத அதிகரிப்பு என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முதுகெலும்பாக விளங்கும் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் இவ்வாண்டு ஆரம்பத்திலேயே பில்லியன் கணக்கில் அதிகரித்திருப்பது நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்புக்கு வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments