வடக்கு கொலம்பியாவில் மாணவர்கள் மற்றும் பெரியவர்களை ஏற்றிச் சென்ற பாடசாலை பேருந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து அதிகாலை 5.40 அளவில் ரெமெடியோஸ் மற்றும் சரகோசா ஆகியவற்றை இணைக்கும் வீதியில் இடம்பெற்றுள்ளது.
16 முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பட்டமளிப்பு விழாவைக் கொண்டாடிவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது, பேருந்து 40 மீட்டர் ஆழத்தில் கவிழ்ந்ததாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


