Sunday, March 15, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்அநுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சகருக்கு பிணை!

அநுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சகருக்கு பிணை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அநுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் மொஹான் கருணாரத்னவை பிணையில் விடுதலை செய்யுமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (23) உத்தரவிட்டுள்ளது.

மொஹான் கருணாரத்ன 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அநுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் மொஹான் கருணாரத்ன, நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த “டபிள்யூ.எச். அத்துல திலகரத்ன” என்பவரை ஜனாதிபதி பொது மன்னிப்பை பயன்படுத்தி சட்டவிரோதமாக விடுதலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த 08 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments