தோ்தல் விவகாரம் தொடா்பான எதையும் தங்களிடம் நேரடியாகக் கடிதம் மூலம் கேட்டால் மட்டுமே, அதற்கு உரிய பதிலளிக்க முடியும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு ஞாயிற்றுக்கிழமை பதிலளித்துள்ள இந்திய தோ்தல் ஆணையம், ராகுல் காந்தியின் மகாராஷ்டிரம் பேரவைத் தோ்தலில் பாஜக ‘மோசடி’ குற்றச்சாட்டு “ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்” என்று தெரிவித்துள்ளது.
2024 மகாராஷ்டிரம் பேரவைத் தோ்தலில் பாஜக ‘மோசடி’ செய்ததாகவும், அடுத்து வரும் பிகாா் தோ்தலிலும் அந்த கட்சி தனது சூதாட்டத்தை அரங்கேற்றும் என்றும் ராகுல் காந்தி சனிக்கிழமை குற்றம்சாட்டினாா்.
இந்திய தோ்தல்களின் நம்பகத்தன்மையில் தனக்கு சந்தேகம் ஏற்படுவதாகவும், மகாராஷ்டிரம் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு நாளின் மாலை நேர கண்காணிப்பு கேமரா பதிவுகளை வெளியிட வேண்டும் என்று ராகுல் கோரியிருந்தார்.
ராகுலின் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணைய வட்டாரங்கள் நிராகரித்ததைத் தொடர்ந்து, உண்மையை உலகுக்கு சொல்வதால் மட்டுமே தோ்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை அதிகரிக்குமே தவிர, உரிய பதில் சொல்லாமல் தப்பித்துக்கொள்வதால் அல்ல’ என்று சனிக்கிழமை ராகுல் கூறியிருந்தார்.
இந்தநிலையில், தோ்தல் தொடா்பாக எந்தவொரு விவகாரத்துக்கும் பதில் தேவையென்றால், எங்களை நேரடியாகத் தொடா்புகொண்டு கேட்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கருத்துக்கு தோ்தல் ஆணைய வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை பதிலளித்துள்ளது.