Wednesday, July 29, 2026
spot_img
Homeபொது செய்திகள்இனி பார்லர் போக வேண்டாம்!

இனி பார்லர் போக வேண்டாம்!

இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், வேலைக்குச் செல்லும் பலரும் தங்களது சருமத்தைப் பராமரிக்கச் சலூன்களுக்குச் செல்வதற்கு நேரம் இருப்பதில்லை.

இதனால் காற்று மாசுபாடு போன்ற பல இன்னல்களை சந்திப்பது இல்லாமல், கரும்புள்ளிகள், சன் டேன் பாதிப்புகள் மற்றும் சுருக்கங்களை நீக்கி, வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டே நமது சருமத்தை பளிச்சென்று ‘ஹோம் ரெமடி’ செய்து நாமே பார்த்துக்கொள்ளலாம்.

நாம் அனைவரின் வீட்டில் அரிசி மாவு இருக்கும். தேவையான அளவு அரிசி மாவு, தேவையான அளவு காய்ச்சாத பிரெஷ் பால்.

இந்த இரண்டு பொருட்களையும் நன்றாகக் கலந்து, முகத்தில் தடவி மென்மையாக மேல்நோக்கியவாறு மசாஜ் செய்ய வேண்டும். கலவை மிகவும் கெட்டியாக இல்லாமல் சற்று தண்ணீராக இருக்க வேண்டும். இல்லையெனில் சரும துவாரங்கள் பெரிதாகி அரிப்பு ஏற்படலாம்.

5 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால், சலூனில் கிளென்சிங் செய்தது போன்ற பொலிவு கிடைக்கும்

காபி தூள் ஸ்கர்ப்பிங் செய்வதற்கு காபித்தூள், சர்க்கரை, தேன் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை தேவையான அளவு எடுத்துக்கொள்ளவேண்டும். இந்த நான்கையும் கலந்து ஒரு தடிமனான பேஸ்ட் போல உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இதனை முகத்தில் தடவி 3 முதல் 5 நிமிடங்கள் வரை மிகவும் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். சர்க்கரை கரையத் தாமதமாகும் என்பதால், கரும்புள்ளிகளை நீக்குகிறேன் என்று முகத்தை வேகமாகத் தேய்க்கக் கூடாது, இது சருமத்தில் எரிச்சலை உண்டாக்கும்.

ஃபேஸ் மாஸ்க் மிகவும் அவசியம். இதற்கு தேவையான நன்றாகக் குலைந்த பப்பாளியை எடுத்து நன்றாக பழக்கூல் போன்று எடுத்துக்கொள்ளவும். 1 அல்லது 2 ஸ்பூன் தேன் எடுத்துக்கொள்ளவும்.

இரண்டையும் கலந்து முகத்தில் ‘மாஸ்க்’ போல அப்ளை செய்ய வேண்டும். 10 முதல் 15 நிமிடங்கள் வரை அப்படியே உலரவிட வேண்டும். மாஸ்க் காய்ந்ததும் சருமம் சற்று இறுகும் என்பதால், முகத்தை ரஃப்பாகத் தேய்க்காமல், மென்மையாகக் குளிர்ந்த நீர் கொண்டு கழுவ வேண்டும்.

இது சருமத்திற்கு உடனடி புத்துணர்ச்சியையும், பளபளப்பையும் தரும்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments