கனடா – இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் குலா. செல்லத்துரை தலைமையில் சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பெற்றிருந்தன
இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மிகப்பிரமாண்டமான முறையில் கனடா கல்விக் கண்காட்சி கடந்த வெள்ளிக்கிழமை மே மாதம் 30ம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமானது.
கனடா – இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் குலா. செல்லத்துரை, மற்றும் குறித்த சம்மேளனத்தின் இலங்கைக்கான தலைவர் பியந்த சந்திரசேகர மற்றும் பலதரப்பட்ட துறைசார் அதிகாரிகள் பங்கேற்கபுடன் இந்த கண்காட்சியானது சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கனடா கல்விக் கண்காட்சி மற்றும் யாழ்ப்பாணம் முதலீட்டு வர்த்தக மன்றம் 2025 என்ற குறித்த கண்காட்சி வடக்கு கிழக்கின் இளைஞர்களை மேம்படுத்தல் – எதிர்காலத்தை கட்டியெழுப்பல் என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படுகின்றது.
வெள்ளிக்கிழமை 30ம் திகதியும் சனிக்கிழமை 31ம் திகதியும் நடைபெற்ற இந்த கண்காட்சியானது இலங்கை வர்த்தக சபை, இலங்கை கனடா வணிக மன்றம், கனடா உயர் ஸ்தானிகராலயம், கனடா இலங்கை வணிக மன்றம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்நேரம் மற்றுமொரு தனியார் விருந்தினர் விடுதியில் முதலீடு மற்றும் வர்த்தக கண்கட்சி நடைபெற்று இதில் வடக்கின் ஆளுநர் உள்ளிட்ட பலர் அதிதிகளாகவும் கலந்து பங்கேற்று சிறப்பித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.