வெந்தயத்தை பொடி செய்து தேன் சேர்த்து உட்கொண்டால் மூல நோயின் கொடுமை குறையும்.
வெள்ளாட்டுப் பால் பசியையும், ஜீரணத்தையும் மேம்படுத்தும். இருமல் வயிற்றுப் போக்கையும் கட்டுப்படுத்தும்.
வெந்தயத் தோசைக்கு கொத்தமல்லித் தழை சேர்த்து அரைத்துச் சுட மிகவும் சுவையாக இருக்கும்.
அடை வார்க்கும்போது நிறைய முள்ளங்கித் துருவல், கூடவே மல்லித் தழை தூவி வார்த்தால் சுவையும் வாசனையும் சத்தும் நிறைந்த அடை தயார்.
பச்சரிசி சாதம் மூளைக்குப் பலம் கொடுக்கும். கோதுமை உணவு, உடலுக்கு வலிமையைக் கொடுக்கும். மலச்சிக்கலையும் போக்கும்.