Sunday, June 15, 2025
spot_img
Homeஇலங்கை செய்திகள்நுவரெலியாவில் அடர்ந்த மூடுபனி ; போக்குவரத்து பாதிப்பு

நுவரெலியாவில் அடர்ந்த மூடுபனி ; போக்குவரத்து பாதிப்பு

நுவரெலியா நகரை நோக்கிச் செல்லும் பல வீதிகளில் நிலவும் அடர்ந்த பனியினால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அட்டன் – நுவரெலியா பிரதான வீதி, நானுஓயா – நுவரெலியா, பதுளை – நுவரெலியா பிரதான வீதியில் நுவரெலியாவிலிருந்து ஹக்கல வரையிலும், நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் பம்பரகெல்ல வரையிலும் கடும் பனிமூட்டத்தால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

அடர்ந்த மூடுபனி நிலவுவதால், இந்த வீதிகளை பயன்படுத்தும் போது வாகன சாரதிகள் தங்கள் வாகனங்களின் பிரதான முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்து மெதுவாக வாகனத்தை செலுத்தி செல்லுமாறு நுவரெலியா பொலிஸ் அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments