Saturday, June 14, 2025
spot_img
Homeஇந்திய செய்திகள்ஆதம்பூர் விமானப்படை வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!

ஆதம்பூர் விமானப்படை வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!

பிரதமர் மோடி இன்று அதிகாலையில் ஆதம்பூர் விமானப்படைத் தளத்திற்குச் சென்றார். அங்கு துணிச்சலான விமானப்படை வீரர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

இந்தியா – பாகிஸ்தானிடையே நிலவிவந்த போர்ப் பதற்றம் பல நாடுகளைத் திரும்பிப் பார்க்கவைத்துள்ளது. மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதத் தளங்களை இந்தியா தாக்குதல் நடத்தி அழித்தது. இதற்குப் பாகிஸ்தான் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த பதில் தாக்குதலை இந்தியா முறியடித்தது. இந்திய முப்படைகள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி செய்துள்ளார்.

இந்த நிலையில், இருநாடுகளுக்குமிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மே 10ஆம் தேதி மாலை 5 மணியளவில் சுமுகமான தீர்வை எட்டியதோடு, போர் நிறுத்தம் செய்த இருநாடுகளும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போர் நிறுத்தத்திற்கும், இரவும், பகலுமாக பாடுபட்டு நாட்டைக் காத்த முப்படைகளுக்கும், ராணுவத்திற்கும் பிரதமர் மோடி தலைவணங்கியுள்ளார்.

இருநாடு தாக்குதலுக்குப் பிறகு பிரதமர் மோடி இன்று ஆதம்பூர் விமானப்படைத் தளத்திற்கு வந்து விமானப்படை வீரர்களுடன் கலந்துரையாடினார். இந்தியா தற்காலிகமாகத் தனது ராணுவ நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாகவும், அதன் நடவடிக்கைகள் பாகிஸ்தானின் நடத்தையால் வழிநடத்தப்படும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments