Saturday, June 14, 2025
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி முடிவு !

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி முடிவு !

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், முடிவை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலனை செய்யுமாறு இந்திய கிரிக்கெட் சபை விராட் கோலியிடம் தெரிவித்துள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான விராட் கோலி, இருபதுக்கு 20 போட்டியில் ஓய்வுபெற்றுள்ள நிலையில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றார்.

ஐ.பி.எல். தொடர் நிறைவடைந்த பின்னர் இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இடம்பெறவுள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தது. இந்த தொடரில் விராட் கோலி சிறப்பாக விளையாடவில்லையென அவர் மீது விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில், ரோகித் சர்மா எதிர்வரும் இங்கிலாந்து தொடருக்கு அணியின் தலைவராக நீடிக்க வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியான நிலையில், ஒரு சில தினங்களுக்கு முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் இடம்பெறவுள்ள நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக விராட் கோலி இந்திய கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளார்.

விராட் கோலி இந்திய அணிக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9230 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் 30 சதம், 31 அரைசதம் அடங்கும். ஆட்டமிழக்காமல் 254 ஓட்டங்களை அடித்தமை ஒரு இன்னிங்சில் அதிகபட்ச விராட் கோலியின் டெஸ்ட் ஓட்ட எண்ணிக்கை ஆகு

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments