ஸ்ரீ தலதா மாளிகையின் இரண்டாவது நாள் வழிபாடு இன்று சனிக்கிழமை (19) மதியம் ஆரம்பமாகியது.
அதன்படி, ஸ்ரீ தலதா வழிபாடு இன்று நண்பகல் 12.00 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறவுள்ளது.
ஸ்ரீ தலதா மாளிகையின் விசேட வழிபாடு முன்னிட்டு பெரும்பாலான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வரிசைகளில் காத்திருப்பதை காணமுடிகிறது.
இதேவேளை, ஸ்ரீ தலதா மாளிகைக்கு வருகை தரும் பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக இன்றைய தினமும் விசேட ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.