Saturday, April 19, 2025
spot_img
Homeஇலங்கை செய்திகள்நானாட்டான் சுற்றுவட்டத்தில் உள்ள வாகனங்களுக்கான மின்சார இணைப்பு பழுது பார்க்கும் கடை ஒன்றில் தீ பரவியதால்...

நானாட்டான் சுற்றுவட்டத்தில் உள்ள வாகனங்களுக்கான மின்சார இணைப்பு பழுது பார்க்கும் கடை ஒன்றில் தீ பரவியதால் அது முற்றாக எரிந்து நாசம்.

முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானாட்டான் சுற்றுவட்டத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள வாகனங்களுக்கான வயரிங் பழுது பார்க்கும் கடை ஒன்றில் 17ம் திகதி அன்று வியாழக்கிழமை மாலை ஏற்பட்ட தீ பரவல் காரணமாக அந்த கடை முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது .

அந்த கடைக்கு உள்ளே நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் வண்டிகளும் முற்றாக எரிந்துள்ளதாக தெரிய வருகிறது.

அருகில் உள்ள ஆலயத்தில் பெரிய வியாழன் வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தமையால் அங்கிருந்த இளைஞர்கள் ஓடி வந்து குறித்த தீப்பரவலை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும் கடை முற்றாக எரிந்து அதற்குள் உள்ள இயந்திர பொருட்களும் எரிந்து சாம்பலாகி உள்ளன.

குறித்த கடையில் ஏற்பட்ட திடீர் மின் ஒழுக்கு காரணமாகவே தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments