Friday, April 11, 2025
spot_img
Homeஇந்திய செய்திகள்2029-க்கு பிறகு தான் ஒரே நாடு ஒரே தேர்தல் – நிர்மலா சீதாராமன்

2029-க்கு பிறகு தான் ஒரே நாடு ஒரே தேர்தல் – நிர்மலா சீதாராமன்

2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகுதான் ஜனாதிபதி ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை தொடங்குவார் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தரங்கில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசினார்.

பின்னர் அவர் உரையாற்றியதாவது: நாடாளுமன்றம், சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் நடக்கும் தேர்தல் முறையே ஒரே நாடு ஒரே தேர்தல். ஒரே நாடு ஒரே தேர்தல் புதிய ஐடியா இல்லை. அது ஏற்கனவே நடைமுறையில் இருந்ததுதான். அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் கண்மூடித்தனமாக எதிர்க்காமல் இருப்பது நல்லது. 2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகுதான் அதிபர் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை தொடங்குவார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments