உத்தர பிரதேசம் மாநிலம் சாந்த்கபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பப்லு (வயது 30,) இவரது மனைவி ராதிகா (28) இவர்கள் இருவருக்கும் கடந்த 20217-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ராதிகாவுக்கு ஏற்கனவே தனது கிராமத்தை சேர்ந்த ஒரு வாலிபருடன் காதல் இருந்து வந்தது. திருமணத்துக்கு பிறகு அவர்களுக்கு இடையே காதல் நீடித்து வந்தது. பப்லு வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர் சென்று விடுவாராம். இந்த சமயத்தை சாதகமாக பயன்படுத்தி காதலர்கள் ரகசியமாக அடிக்கடி சந்தித்து காதலை வளர்த்து வந்தனர். இந்த விஷயம் அரசல் புரசலாக உறவினர்கள், கிராம மக்களுக்கு தெரிய வந்தது. இது பற்றி அவர்கள் பப்லுவிடம் தெரிவித்தனர். அவரும் மனைவியிடம் 2 குழந்தைகள் உள்ளனர்.
இனிமேலும் பாழாப்போன காதல் உனக்கு தேவையா எனக்கூறி பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் ராதிகாவோ காதலனை என்னால் மறக்க முடியாது.அவர் இல்லாமல் நான் உயிருடன் இருக்கமாட்டேன் இன்று திரைகதை வசனம் போல் கணவரிடம் நீலக்கண்ணீர் வடித்தார். இதனால் வேறு வழி இல்லாமல் மனைவி நிம்மதியாக காதலனுடனே சேர்ந்து வாழட்டும் என்று முடிவு எடுத்த பப்லு உறவினர் மற்றும் கிராம மக்களிடம் தனது கருத்தை தெரிவித்தார். முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உறவினர்கள், கிராம மக்கள் பின்னர் சம்மதம் தெரிவித்து விட்டனர். காதலர்களும் இதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டனர்.
நேற்று கோர்ட்டில் வைத்து ராதிகாவுக்கும் அவரது காதலருக்கும் பப்லு சட்டப்படி திருமணம் செய்து வைத்தார். பின்னர் அங்குள்ள ஒரு கோவிலில் குழந்தைகள், மற்றும் உறவினர்கள் பெரியவர்கள் முன்னிலையில் ராதிகாவும், காதலனும் மாலை மாற்றிக்கொண்டனர். திருமணம் முடிந்ததும் பப்லு தனது மனைவியிடம் 2 குழந்தைகளை தான் வளர்க்க விரும்புவதாக தெரிவித்தார். இதற்கு ராதிகாவும் விட்டால்போதும் என்று பச்சைக்கொடி காட்டிவிட்டார்.
இதனையடுத்து 8 ஆண்டுகளாக தன்னுடன் குடும்பம் நடத்திய மனைவியை சினிமா பாடலில் வருவதுபோல் எங்கிருந்தாலும் நீ வாழ்க.. நீ வாழ்க என்று மனதை கல்லாக்கிக்கொண்டு காதலனுடன் மனைவியை அனுப்பி வைத்தார் பப்லு. மனைவி காதலனுடன் சென்றுவிட்டதால் 2 குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்றார்.