பேலியகொடை மெனிங் சந்தைத் தொகுதியில் உத்தியோகபூர்வமற்ற முறையில் முன்னெடுக்கப்படும் சிற்றுண்டி வியாபாரத்தை முறைப்படுத்த புதிய வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ் தெரிவு செய்யப்பட்ட வர்த்தகர்களுக்கு முறையான நடமாடும் விற்பனைக்கூடங்கள் மற்றும் தேவையான விசேட உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.
இதற்கமைய, சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான நடமாடும் விற்பனைக்கூடங்கள் மற்றும் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு நேற்று (04) கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில தலைமையில் பேலியகொடை புதிய மெனிங் வர்த்தகத் தொகுதியில் நடைபெற்றது.


