கொழும்பு பல்கலைக்கழக வளாகத்திற்குள் டெங்கு நோய்த்தொற்று பரவி வருவதன் காரணமாக, பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் நாளை (10) முதல் ஜூலை 15 ஆம் திகதி வரை இணையவழியில் நடத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.


