Thursday, July 9, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்பழைய போகம்பரை சிறை வளாகத்தில் புதிய சிறைச்சாலை - வர்த்தமானி வெளியீடு

பழைய போகம்பரை சிறை வளாகத்தில் புதிய சிறைச்சாலை – வர்த்தமானி வெளியீடு

பழைய போகம்பரை சிறைச்சாலை வளாகத்திற்குள் புதிய சிறைச்சாலை ஒன்றை நிறுவுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெளியிட்டுள்ளார்.

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 54) 2 ஆவது பிரிவின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் என்ற ரீதியில் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ள அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இதற்கான வர்த்தமானி அறிவித்தலை நேற்று வெளியிட்டுள்ளார்.

இந்த வர்த்தமானி அறிவித்தலின்படி, பழைய போகம்பரை சிறைச்சாலையின் அதிகார வரம்பு முழு இலங்கையையும் உள்ளடக்கியதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments