டிட்வா அனர்த்தத்தினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட கண்டி நீதிமன்றத்தின் தற்போதைய நிலைமை மற்றும் அதன் திருத்தப் பணிகள் குறித்து ஆராய்வதற்காக அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார அங்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
நேற்று (12) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட இந்த விஜயத்தை அடுத்து, அமைச்சரின் தலைமையில் கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி மற்றும் பல நீதிவான்களின் பங்கேற்புடன் நீதிமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றது.
கண்டி நீதிமன்ற வளாகத்தின் திருத்தப் பணிகளை ஐந்து மாதங்களுக்குள் நிறைவு செய்வதற்கு இதன்போது ஆலோசிக்கப்பட்டது.
முற்றிலும் செயலிழந்துள்ள மின் உயர்த்திகளை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வருதல் மற்றும் குளிரூட்டி தொகுதிகளை பழுதுபார்த்தல் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் என்பன தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் துஷாரி ஜயசிங்க உள்ளிட்ட சட்டத்தரணிகள், நீதி, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


