Sunday, March 8, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்விமானப்படையின் 75 ஆவது ஆண்டு!

விமானப்படையின் 75 ஆவது ஆண்டு!

இலங்கை விமானப்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் கண்காட்சி மற்றும் வான் சாகச நிகழ்வுகள் இன்று; ரத்மலானை, இலங்கை விமானப்படை தளத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கை விமானப்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் வான் சாகசங்கள் மற்றும் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டார்

விமானப்படைத் தளத்திற்கு வருகை தந்த முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு விசேட வரவேற்பளிக்கப்பட்டது.

இதன்போது ஜனாதிபதி அநுரகுமாரதிசாநாயக்க விமானப்படை அருங்காட்சியகத்தில் சிறப்பு நினைவுக் குறிப்பினை பதிவு செய்தார்

இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில், விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு நினைவுப் பரிசொன்றையம் வழங்கிவைத்தார்.

இதேவேளை இந்தக் கண்காட்சி மற்றும் வான் சாகச நிகழ்வுகள் நாளை வரை இடம்பெறவுள்ளதுடன் பொதுமக்கள் பிற்பகல் 02.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பங்கேற்பதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments