2025-26 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரித் தாக்கல் (ITR) செய்தவர்களில் சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களின் வரி ரீபண்ட் தொகையைப் பெற முடியாமல் காத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏன் இந்தத் தாமதம்? வருமான வரித்துறை தற்போது ‘NUDGE’ எனும் புதிய முறையை அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம், உங்கள் படிவத்தில் உள்ள தகவல்களும், வங்கியிடம் உள்ள தரவுகளும் (AIS) துல்லியமாகப் பொருந்தினால் மட்டுமே ரீபண்ட் வழங்கப்படுகிறது. சிறு மாற்றங்கள் இருந்தாலும் சரிபார்ப்புக்காக நிறுத்தி வைக்கப்படுகின்றன. மேலும், வங்கி கணக்கு ‘Pre-validate’ செய்யப்படாமல் இருப்பதும் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
ரீபண்ட் நிலையை அறிவது எப்படி?
-
வருமான வரி போர்டல்: உங்கள் PAN மற்றும் கடவுச்சொல் மூலம் லாக்-இன் செய்து, ‘View Filed Returns’ பகுதிக்குச் சென்று தற்போதைய நிலையை அறியலாம்.
-
NSDL தளம்: NSDL இணையதளத்தில் உங்கள் PAN எண் மற்றும் மதிப்பீட்டு ஆண்டைக் குறிப்பிட்டு ரீபண்ட் நிலையைச் சரிபார்க்கலாம்.


