வடமராட்சி நிருபர்
யாழ்ப்பாணம் அரியாலை 13ஆம் கட்டை பகுதியில் சற்றுமுன் விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது
யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிவிரைவு புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியே இந்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது
விபத்தில் காயமடைந்த அரியாலையை சேர்ந்த 23வயதுடைய இளைஞன் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பாக போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
குறித்த பாதுகாப்பற்ற புகையிரத கடவையால் கடந்தகாலங்களில் உயிரிழப்பு சம்பவங்கள் பதிவானதாகவும்.உரிய பாதுகாப்பு கடவை அமைக்ககோரி மக்கள் பல முறை போராட்டம் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மக்கள் தெரிவிக்கின்றனர்


