Sunday, June 7, 2026
spot_img
Homeஉலக செய்திகள்அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு; இருவர் பலி

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு; இருவர் பலி

அமெரிக்காவில் பிரவுன் பல்கலைகழகத்தில் இனந்தெரியாத நபர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

பிரவுன் பல்கலைக்கழகத்தில் பரீட்சைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு கட்டிடத்தில், சனிக்கிழமை (13) பிற்பகல் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

கறுப்பு நிற உடை அணிந்திருந்த துப்பாக்கிதாரியைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

“நினைத்து கூட பார்க்க முடிய வில்லை நடந்ததை,” என்று சோகமான ரோட் தீவு ஆளுநர் டான் மெக்கீ இதன்போது அந்நாட்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

அத்துடன், அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தார்.

வளாகத்தில் உள்ள பாரஸ் ரூ ஹோலி பொறியியல் மற்றும் இயற்பியல் கட்டிடத்திற்கு அருகில் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பிரவுன் பல்கலைக்கழகத்திலிருந்து பொலிஸாருக்கு தகவல் வந்துள்ளது.

இதனை தொடர்ந்து, சிறிது நேரத்திலேயே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அந்த இடத்தில் தங்குமாறு பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.

“பாரஸ் ரூ ஹோலி பொறியியல் அருகே ஒரு துப்பாக்கிச் சூடு நடத்துபவர் இருக்கிறார். கதவுகளைப் பூட்டி, தொலைபேசிகளை அமைதிப்படுத்தி, மறு அறிவிப்பு வரும் வரை மறைந்திருக்கவும்” என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் கட்டிடத்தில் யார் இருந்தார்கள் என்பதைக் கண்டறிய புலனாய்வாளர்கள் பணியாற்றி வருவதாக பிராவிடன்ஸ் பொலிஸ் பிரதி தலைவர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு வகுப்பறையிலா அல்லது நடைபாதையிலா நடந்தது என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments