மியன்மாரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை மீது மியன்மார் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 34 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், 76 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் 27 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்தத் தாக்குதல்கள் குறித்து மியன்மார் படையினர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.


