Thursday, March 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்யாழ்ப்பாணம்- மன்னார் வீதி வெள்ளத்தால் பாதிப்பு

யாழ்ப்பாணம்- மன்னார் வீதி வெள்ளத்தால் பாதிப்பு

நமது நிருபர்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மல்வத்து ஓயாவின் ஆற்று வெள்ளம் மன்னார் மாவட்டத்தின் அநேக இடங்களில் பாதிப்பினை ஏற்படுத்தி யுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே.திலீபன் தெரிவித்துள்ளார்.

அதற்கு அமைவாக ஏ-32 வீதி மன்னார் தொடக்கம் யாழ்ப்பாணம் வரை செல்லும் வீதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

குறித்த வீதியூடாக பெரிய மற்றும் சிறிய வாகனங்களில் பயணம் செய்வதை முற்றாக தவிர்க்குமாறு பயணிகள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

எனவே பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேவையற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments