Thursday, March 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மருத்துவ பரிசோதனைக்கு சென்ற பெண்; தகாத முறைக்கு உட்படுத்திய மருத்துவர்!

மருத்துவ பரிசோதனைக்கு சென்ற பெண்; தகாத முறைக்கு உட்படுத்திய மருத்துவர்!

பெண்ணொருவரை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கஹதுடுவ, வெத்தார மாவட்ட மருத்துவமனையில் 26 வயதுடைய பெண் ஒருவரைப் தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் 40 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாதிக்கப்பட்ட பெண் அளித்த காவல்துறை முறைப்பாட்டின் படி, அவர் கடந்த 12 ஆம் திகதி அன்று வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்காகச் சென்றுள்ளார்.

மீண்டும் அவர் 19 ஆம் திகதியன்று சிறுநீர் பரிசோதனை அறிக்கையுடன் வந்த போது, அந்த மருத்துவர் அவரைப் பெண் உதவியாளர் துணையின்றி ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு, சிகிச்சையளிப்பது போல் பாசாங்கு செய்து அந்தப் பெண்ணிடம் குறித்த மருத்துவர் தவறாக நடந்து கொண்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளுக்காக இரு தரப்பினரும் அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவர் நேற்று (24) காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments