Sunday, March 15, 2026
spot_img
Homeஉலக செய்திகள்மக்கா யாத்திரை பயணம்; 42 பேர் பலி

மக்கா யாத்திரை பயணம்; 42 பேர் பலி

சவுதி அரேபியாவில் ஏற்பட்ட வாகன விபத்தில் சிக்கி 42 இந்தியர்கள் உயிரிழந்தனர்.

பேருந்தும் ஒன்றும் டீசல் ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்றும் நேருக்குநேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் மதீனா அருகே, மக்காவிலிருந்து மதீனாவிற்கு உம்ரா புனித பயணிகளை ஏற்றிச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 20 பெண்கள், 11 சிறுவர்கள் உட்பட 42 இந்தியர்கள் உயிரிழந்தநிலையில் ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

24 வயதான முகமது அப்துல் சோயிப் என்ற இளைஞர் மட்டும் உயிர் பிழைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இளைஞன் ஓட்டுநருக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்து பயணித்ததாகக் கூறப்படுகிறது.

அவர் படுகாயமடைந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments