Thursday, March 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் பாலியல் சேட்டை புரிந்தவர் கைது!

சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் பாலியல் சேட்டை புரிந்தவர் கைது!

கண்டி, பேராதனை வீதியில் உள்ள தனியார் மருத்துவ நிலையத்தில் முகத்தில் உள்ள தழும்புகளுக்கு சிகிச்சை பெற வந்த இளம் பெண் ஒருவரிடம் பாலியல் சேட்டை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக கண்டி குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகம் ஒருவரை கைது செய்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

அந்த இளம் பெண் நேற்று (13) மதியம் சிகிச்சைக்காக மையத்திற்குச் சென்றிருந்த போது சிகிச்சைக்காக அவரிடம் ரூ.35,000 செலுத்துமாறு வைத்தியர் கேட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடம் ரூ.20,000 மட்டுமே இருந்ததால், மீதமுள்ள தொகையை பின்னர் செலுத்த யுவதி அவகாசம் கேட்டுள்ளார். இதன் போது ரூ.5,000 சிறப்புக் கழிவாகச் செலுத்தி, மீதமுள்ள ரூ.10,000 பின்னர் செலுத்த அனுமதிப்பதாக கூறியுள்ளனர்.

பின்னர் மருத்துவ நிபுணர் என்று கூறிக் கொண்ட குறித்த சந்தேக நபர், யுவதியின் உடலைப் பரிசோதிப்பதாக கூறி அங்க சேட்டையில் ஈடுபட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் பெண் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments