Friday, March 20, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்வீதியோரத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில் கடவுசீட்டுகள்!

வீதியோரத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில் கடவுசீட்டுகள்!

திருகோணமலை புல்மோட்டை 13வது தூண் பகுதியில் வீதியோரத்தில் கைவிடப்பட்டிருந்த இலங்கையர்களுக்குச் சொந்தமான ஏழு வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை புல்மோட்டை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்த கடவுச்சீட்டுகள் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் புதன்கிழமை (12) மதியம் இந்த கடவுச்சீட்டுகளை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கடவுச்சீட்டுகளை யாரோ இந்த இடத்தில் விட்டுச் சென்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த கடவுச்சீட்டுகளை இந்த இடத்தில் யார் விட்டுச் சென்றனர் என்பதைக் கண்டறிய புல்மோட்டை பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments