Friday, March 20, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்விவசாயிகள் நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தம்

விவசாயிகள் நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தம்

விவசாயிகள் குரல் அமைப்பினர் நாளை (10) நாடு தழுவிய விவசாய வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது.

இதன்படி, நாளை நாடு முழுவதும் உள்ள விவசாய காணிகளில் பயிர்ச்செய்கை, போக்குவரத்து மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் இருந்து விலகப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

கடந்த காலத்தில், பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு விவசாயிகள் விலைப் பிரச்சினை காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

அவர்கள் பல சந்தர்ப்பங்களில், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காய இறக்குமதியைக் கட்டுப்படுத்தி உள்நாட்டு விவசாயிகளைப் பாதுகாக்க ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்தைக் கோரினர்.

ஆனால், அதற்கு அரசாங்கத்திடமிருந்து முறையான பதில் கிடைக்காததால், தேசத்தின் விவசாயிகள் குரல் அமைப்பு இந்த வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது.

இந்த வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டதன் விளைவாக, வார இறுதியில் சில பொருளாதார மையங்களில் கடுமையான நெரிசல் காணப்பட்டதுடன், மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments