Friday, March 13, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்296 கோடி சொத்து மறைவு -ரமித் மீது ஊழல் குற்றச்சாட்டு!

296 கோடி சொத்து மறைவு -ரமித் மீது ஊழல் குற்றச்சாட்டு!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

நேற்று (12) கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட இந்த குற்றப்பத்திரிகை, ரமித் ரம்புக்வெல்ல 2022 ஜனவரி 1 முதல் 2023 நவம்பர் 14 வரை 21 மாத காலத்தில் 296.5 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை ஈட்டியிருப்பதை குறிக்கிறது. அதில் சுமார் 275.3 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை எவ்வாறு ஈட்டியதாகும் என்பதை அவர் வெளிப்படுத்த தவறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்த சொத்துகளில் கொழும்பு 07, தர்மபால மாவத்தையில் அமைந்துள்ள இரண்டு சொகுசு வீடுகள் (ரூ. 80 மில்லியன் மற்றும் ரூ. 65 மில்லியன் மதிப்பில்), 18 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள டிஸ்கவரி ஜீப் வாகனம், மேலும் பல சொத்துக்கள் அடங்கும்.

மேலும், ரமித்தின் பெயரில் 4 வங்கிக் கணக்குகள், அவரது மனைவியின் பெயரில் 4 வங்கிக் கணக்குகள், நிலையான வைப்புத் தொகைகள் உள்ளிட்ட நிதி வசதிகளும் இருப்பதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில், அவரது தனிப்பட்ட செயலாளராக ரமித் பணியாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments