ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் எந்தச் சரத்தும், அரசியலமைப்பின் எந்த விதிகளுக்கும் முரணாக இல்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இன்றைய சபை அமர்வின் ஆரம்பத்தில், உயர் நீதிமன்ற வியாக்கியானத்தை சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரட்ன வாசித்து அறிவித்தார்.
இதன்படி, குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.


