ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று (செப்டெம்பர் 09) அபுதாபியில் ஆரம்பமாகிறது என ஆசியக் கிண்ண கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
தொடரின் தொடக்கப் போட்டி ஆப்கானிஸ்தான் மற்றும் ஹொங்கொங் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
மொத்தம் எட்டு அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து போட்டியிடுகின்றன. இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஹொங்கொங் அணிகள் குழு “B” யில் இடம்பெற்றுள்ளன.
இந்தியா, பாகிஸ்தான், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் குழு “A”வில் போட்டியிடுகின்றன.


