Monday, March 16, 2026
spot_img
Homeஉலக செய்திகள்சிரியாவில் ஐஎஸ் அமைப்பு மீண்டும் தலைதூக்கலாம் - அன்டனி பிளிங்கென்

சிரியாவில் ஐஎஸ் அமைப்பு மீண்டும் தலைதூக்கலாம் – அன்டனி பிளிங்கென்

ஐஎஸ் அமைப்பு சிரியாவில் மீண்டும் தலைதூக்க முயலும் என அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் எச்சரித்துள்ளார்.

எனினும் இது நடைபெறுவதற்கு அனுமதிப்பதில்லை என்பது குறித்து அமெரிக்கா உறுதியாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்தள்ளதாவது

சிரிய மக்களே தங்கள் எதிர்காலத்தை தெரிவுசெய்யவேண்டும்.

அமைதியான ஆட்சியொன்றை உருவாக்குவது குறித்த கிளர்ச்சியாளர்களின் அறிக்கைகள் வரவேற்கத்தக்கவை.ஆனால் அவர்களின் நடவடிக்கைகளே முக்கியம் வார்த்தைகள் இல்லை.

சிரியாவின் பசார் அல் அசாத் அரசாங்கத்தின் வீழ்;ச்சி காட்டுமிராண்டித்தனத்தையும் ஊழலையும் சாத்தியமாக்கியவர்களின் வீழ்ச்சி.

ஈரான் ஹெஸ்புல்லா ரஸ்யா ஆகிய தரப்பினரை விட வேறு எவரும் இதனை செய்யவில்லை.

இந்த தருணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது,அதேவேளை குறிப்பிடத்தக்க ஆபத்துக்களும் உள்ளன.

நம்பிக்கையை ஏற்படுத்தும் சூழ்நிலைகள் எவ்வளவு வேகமாக மாற்றமடையலாம் வன்முறை மோதலாக மாறலாம் என்பதை வரலாறு வெளிப்படுத்துகின்றது.

தன்னை மீண்டும் வலுப்படுத்திக்கொள்வதற்கு இந்த தருணத்தை ஐஎஸ் அமைப்பு பயன்படுத்திக்கொள்ளும்,தனது மறைவிடங்களை ஏற்படுத்த முயலும் என அவர் தெரிவித்துள்ளார்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments