Wednesday, July 1, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்200 மில். டொலர் நிதி உதவிக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஒப்புதல்!

200 மில். டொலர் நிதி உதவிக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஒப்புதல்!

இலங்கைக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர உதவி நிதியுதவிப் பொதியை ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) அங்கீகரித்துள்ளது.

இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைக்கும் மற்றும் புனரமைக்கும் பணிகளுக்காகவே இந்த அவசர நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் அறிக்கையின்படி, இந்த நிதியுதவி வங்கியின் சாதாரண மூலதன வளங்களிலிருந்து வழங்கப்படும் 100 மில்லியன் டொலர் வழக்கமான கடன் மற்றும் 100 மில்லியன் டொலர் சலுகைக் கடன், மற்றும் திட்டச் செயலாக்கம், தயார்நிலை, மற்றும் தர உறுதிப்பாட்டை வலுப்படுத்த உதவும் வகையில் 500,000 டொலர் தொழில்நுட்ப உதவி மானியம் ஆகியவை அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments