Sunday, July 19, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்யாழில் தமிழ்க் கட்சிகள் திடீர் சந்திப்பு!

யாழில் தமிழ்க் கட்சிகள் திடீர் சந்திப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் இல்லத்தில் இன்று காலை இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், மு.சந்திரகுமார், சி.வேந்தன் மற்றும் நா.இரட்ணலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தச் சந்திப்பின்போது, நாட்டின் சமகால அரசியல் நிலவரங்கள் மற்றும் சிறுபான்மைக் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள புதிய அரசியல் கூட்டு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது என்று சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments