Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்ஹொரணை முதியோர் இல்லத்தில் தீப்பரவல்: 11 பேர் பலி

ஹொரணை முதியோர் இல்லத்தில் தீப்பரவல்: 11 பேர் பலி

களுத்துறை – ஹொரணை, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த 7 பேர் ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்து நேர்ந்த போது குறித்த முதியோர் இல்லத்தில் 72 வயோதிபர்கள் தங்கியிருந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தீப்பரவல் தொடர்பான தகவல் கிடைத்ததை அடுத்து தீயணைப்புப் படையினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும், இந்தத் தீ விபத்தினால் அந்த மையத்திற்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அங்கிருந்த 44 முதியவர்களை எவ்வித உயிராபத்துகளுமின்றி பாதுகாப்பாக மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதியோர் இல்லத்தில் இந்தத் திடீர் தீப்பரவலுக்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

எனினும், விபத்துக்கான பின்னணி குறித்து கண்டறிவதற்காகக் காவல்துறையினர் பல கோணங்களில் தங்களது தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments