ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், தமிழக பொதுப்பணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நேற்று வெள்ளிக்கிழமை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது
அத்துடன், இலங்கையிலுள்ள சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து, விரைவில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை சந்திப்பதற்கு வருகை தரவுள்ளமை குறித்தும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எடுத்துரைத்தார்.


