இலங்கையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு டிஜிட்டல் பொருளாதார அமைச்சிக்கும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்திற்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
டிஜிட்டல் மாற்றம் மற்றும் புதுமைகள் நாட்டின் மூலோபாய நோக்கங்களுடன் ஒத்துப்போகும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தம் உள்ளது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் செயற்கை நுண்ணறிவு சிங்கப்பூர் எனப்படும் தேசிய திட்டத்தில் கலந்துரையாடப்பட்டு இந்த கூட்டு முயற்சி நடைமுறைப்படுத்தப்படும்.
கூட்டு ஆராய்ச்சி திட்டங்கள், செயற்கை நுண்ணறிவு பயிற்சி திட்டங்கள் மற்றும் அறிவு பரிமாற்றம் உள்ளிட்ட இரு நாடுகளுக்கும் இடையே செயலில் ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை நிறுவ இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் முயல்கிறது.
இந்த ஒப்பந்தம் இலங்கையின் செயற்கை நுண்ணறிவு திறன்களை மேம்படுத்துவதோடு, மேம்பட்ட தொழில்நுட்பத்தின் மூலம் உள்ளூர் மற்றும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் முயற்சிகளை ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச கல்வி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்தும் அதேவேளையில் நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை முன்னோக்கி நகர்த்த இந்த நடவடிக்கை குறிப்பிடத்தக்கதொரு முதல் படியாக இருக்கும் என அரசாங்கம் கருதுகிறது.


