Thursday, June 11, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்சுரேஷ் சலேயின் மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு

சுரேஷ் சலேயின் மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தாக்கல் செய்திருந்த ரிட் மனு மீதான மேலதிக பரிசீலனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தாம் கைது செய்யப்பட்டு, தமக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள தடுப்புக் காவல் உத்தரவை செல்லுபடியற்றதாக்குமாறு கோரியே சுரேஷ் சலே இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையிலேயே, இம்மனு மீதான பரிசீலனை நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments