முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் சுரேஷ் சலே உணவு தவிர்ப்பு போராட்டத்தைக் கைவிட முடிவு செய்துள்ளார்.
தனது சட்ட ஆலோசகரின் ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளை ஏற்று, அவர் இந்த போராட்டத்தைக் கைவிட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாம் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க போராடுவதற்கு உயிரோடு இருப்பது அவசியம் என முடிவுசெய்த அவர், அந்த முடிவைத் தனது மருத்துவக் குழுவினருக்கும் விசாரணை அதிகாரிகளுக்கும் அறியப்படுத்திய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


