Tuesday, July 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காகக் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் சிறைச்சாலை வளாகத்திற்குள் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் இரு பிரிவினருக்கு இடையே நேற்று (05) மதியம் 1 மணியளவில் மோதல் ஏற்பட்டிருந்தது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவொன்றுக்கும், தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவொன்றுக்கும் இடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் கைதிகள் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 38 பேர் காயமடைந்து தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று (06) காலை நிலவரப்படி சிறைச்சாலையின் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த போதிலும், தற்போது அங்கு மீண்டும் ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments