இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளின் தலைவரை மீட்பது தொடர்பாக, மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனுடன் பல விடயங்களை கலந்தாலோசித்ததாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தர்ப்பத்தில் சம்பந்தன் உள்ளிட்ட இலங்கையின் தமிழ் தலைவர்கள் மற்றும் கருணாநிதி, ஜெயலலிதா, சர்வதேச, உள்ளுர் தமிழ் தலைவர்கள் அனைவரும் சந்தித்தி பேசியதாகவும் கூறியுள்ளார்.
அச்சந்தர்ப்பத்தில், இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளின் தலைவரை சுற்றிவளைப்பது தொடர்பில் கலந்துரையாடியதாகவும் கூறியுள்ளார்.
மேலும் கனடா உட்பட குமரன் பத்மநாபன் ஊடாக சர்வதேச ஒத்துழைப்பும் மேற்கொள்ளப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
அதனுடாக விடுதலைப் புலிகளின் தலைவரை கடல் மார்க்கமாக கொண்டு செல்வதற்கு, அதற்கு அமெரிக்காவின் மெரைன் உத்துழைப்பும் பெறப்பட்டது என்றும் பாட்டலி பகிரங்க கருத்தொன்றை வெளிப்படுத்தியுள்ளார்.
இறுதியில் சம்பந்தன் உட்பட அனைத்து சர்வதேச மற்றும் உள்ளுர் தலைவர்கள் பிரபாகரனை கொலைசெய்யுமாறு கூறியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜெயலலிதாவின் கூற்று
குறிப்பாக ஜெயலலிதாவின் கூற்றில், “நான் தான் உலக தமிழ் தலைவர்களின் தலைவி, ஆனால் பிரபாகரன் சர்வதேச தமிழர்களின் தலைவராக நினைக்கிறார். அவருக்கு முடிவு கட்டவும்” என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பாசனைகள் அனைத்தும் சிவசங்கர் மேனனுடனான இறுதி சந்திப்பில் தெரிவிக்கப்பட்டதாகும் என பாட்டலி விளக்கியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் சுற்றிவளைப்பு! இந்தியாவில் இருந்து மகிந்தவுக்கு வந்த கட்டளை
இலங்கையின் இறுதி போர் களத்தில் புதுமாத்தளன் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை இராணுவம் சுற்றிவளைத்ததாகவும், அந்த சந்தர்ப்பத்தில் அன்றிருந்த இந்திய வெளியுறவுச் செயலார் சிவசங்கர் மேனன் பெரியதாக ஒன்றும் செய்ய வேண்டாம் என மகிந்த ராஜபக்சவுக்கு (Mahinda Rajapaksa) உத்தரவு வழங்கியதாகவும் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தேர்தல் முடியும் வரை காத்திருக்குமாறு சிவசங்கர் மேனன் மகிந்தவுக்கு தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அச்சந்தர்ப்பத்தில் நாங்களும் பார்த்துக் கொண்டிருந்தோம்.
தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிப் பெறும் என அப்போது தெரிவிக்கப்பட்டது.
ஏனென்றால், பாரதிய ஜனதா கட்சி விடுதலைப்புலிகளுக்கு சார்பானவர்கள் பேர்டினன்ட் மற்றும் இன்றிருக்கும் அண்ணாமலை போன்றோரும் உள்ளடங்குவர்.
மோடியும் அண்மையில் நம்நாட்டின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் பல ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்ட பின்னர் அகண்ட பாரத்தத்தின் ஒரு பகுதி என்று தெரிவித்திருந்தார்.
இதில் பாரிய மறைமுக அரசியல் அரங்கங்கள் செயற்படுகின்றன.
நாங்கள் எதிர்பார்க்காத நிலையில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுக் கொண்டு செல்லுகையில்,சிவசங்கர் மேனனும், முடித்துக் கொள்ளுங்கள் என எங்களுக்கு கட்டளை வழங்கினார்” என தெரிவித்துள்ளார்.


