Tuesday, March 17, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (18) உத்தரவிட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரசன்ன ரணவீர, மஹர நீதவான் முன்னிலையில் இன்றைய தினம் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டில் போலி ஆவணங்களை தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் பிரசன்ன ரணவீரவை கைது செய்யுமாறு நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஆனால், முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர நீதிமன்றில் சரணடையாமல் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று நீண்ட காலமாக தலைமறைவாக இருந்தார்.

பின்னர், முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர கடந்த மே மாதம் 07 ஆம் திகதி நீதிமன்றில் சரணடைந்ததையடுத்து தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் இவ் வழக்கில் கைதுசெய்யப்பட்ட சிங்கப்பூர் சரத் எனப்படும் தொன் சரத் குமாரவும் தொடர்ந்த்து விளக்கமரியலிலேயே உள்ளார்.

இதனைவிட இந்த விவகாரத்தில் கைதுசெய்ய களனி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மில்ரோய் பெரேராவை கைது செய்ய தொடர் விசாரணைகள் இடம்பெறுவதாக சி.ஐ.டி.யினர் முன்னர் மஹர நீதிவான் நீதிமன்றுக்கு தெரிவித்திருந்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments