Sunday, March 15, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன் ரூபா மோசடி உதய கம்மன்பில விடுதலை !

பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன் ரூபா மோசடி உதய கம்மன்பில விடுதலை !

போலி ஆவணம் தயாரித்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவருக்குச் சொந்தமான பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன் ரூபா மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் வர்த்தகர் ஜயசிங்க ஆகியோரை குறித்த குற்றச்சாட்டிலிருந்து விடுவித்து விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (24) உத்தரவிட்டுள்ளது.

நீண்ட காலமாக தொடரப்பட்ட இந்த வழக்கு மேல் நீதிமன்ற நீதவான் நாமல் பண்டார பலல்லே முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

1996 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26 முதல் 1997 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25 ஆகிய திகதிகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் போலி ஆவணம் தயாரித்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவருக்குச் சொந்தமான பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன் ரூபா மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் வர்த்தகர் ஜயசிங்க ஆகியோருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் வர்த்தகர் ஜயசிங்க ஆகியோருக்கு எதிராக போதுமான சாட்சிகள் இல்லாத காரணத்தினால் அவர்களை வழக்கிலிருந்து விடுவித்து விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments