Tuesday, July 14, 2026
spot_img
Homeஉலக செய்திகள்தாய்லாந்தில் களியாட்ட விடுதியில் தீ விபத்து - 27 பேர் பலி

தாய்லாந்தில் களியாட்ட விடுதியில் தீ விபத்து – 27 பேர் பலி

தாய்லாந்தின் பேங்கொக் நகரில் உள்ள களியாட்ட விடுதி ஒன்றில் இன்று (13) அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி சுமார் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 9 ஆண்களும், 18 பெண்களும் அடங்குவதாக அந்த நாட்டின் பிரதமர் அனுதின் சார்ன்விராகுல் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் அங்கு தொடர்ந்தும் தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் 63 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்திய ஆண்டுகளில் தாய்லாந்தில் நடைபெற்ற மிக மோசமான தீ விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்தும் சிகிச்சை இடம்பெற்று வருவதுடன், குறித்த களியாட்ட விடுதியில் அனர்த்தங்களின் போது வௌியேறுவதற்கான அவசர கதவுகள் இல்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன்காரணமாகவே அதிகளவான உயிர் பலிகள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

தீப்பரவலுக்கான காரணம் தெரியவராத நிலையில், அது தொடர்பில் தாய்லாந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments