Monday, August 17, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்தலைமன்னாரில் சிதைவடைந்த நிலையில் சடலம் மீட்பு

தலைமன்னாரில் சிதைவடைந்த நிலையில் சடலம் மீட்பு

தலைமன்னாரில் சிதைவடைந்த நிலையில் சடலம் மீட்பு

தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுக்குடா மீன்பிடி துறையை அண்டிய கடற்கரை பகுதியில் சிதைவடைந்த நிலையில் அடையாளம் காண முடியாத வகையில் ஆண் ஒருவரின் சடலம் மீன் பிடியில் வலையினால் சுற்றப்பட்ட நிலையில் இன்று  (17) கரை ஒதுங்கியுள்ளது.

தலைமன்னாரில் சிதைவடைந்த நிலையில் சடலம் மீட்பு

குறித்த கடற்கரை பகுதியில் உள்ள கடற்படையினர் குறித்த சடலத்தை   அவதானித்து தலைமன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் தலைமன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.

குறித்த சடலம் மீட்கப்பட்ட நிலையில் மன்னார் பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் இது குறித்து தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments