Monday, March 16, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்தங்காலை கடற்பகுதியில் கவிழ்ந்த மீன்பிடி படகு: காணாமல் போன மீனவரில் ஒருவரின் சடலம் மீட்பு

தங்காலை கடற்பகுதியில் கவிழ்ந்த மீன்பிடி படகு: காணாமல் போன மீனவரில் ஒருவரின் சடலம் மீட்பு

தங்காலை, பரவிவெல்ல கடற்பகுதியில் பல நாள் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் காணாமல் போன இரண்டு மீனவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த மீனவரின் சடலம் கடற்படையினரின் உதவியுடன் விமானப்படை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மீன்பிடிக்கச் சென்றுவிட்டு மீன்பிடித் தளத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இவ்வாறு விபத்துக்குள்ளானது.

விபத்து நடந்த நேரத்தில் படகில் 6 மீனவர்கள் இருந்ததோடு, அவர்களில் நான்கு பேர் ஒரு டிங்கி படகு உதவியுடன் மீட்கப்பட்டனர்.

விபத்தில் காணாமல் போன மற்றைய மீனவரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments