அண்டை வீட்டாரின் கோய் மீன் வளர்ப்புத் தொட்டிக்குள் நிர்வாணமாக இறங்கி, அங்குள்ள மீன்களுக்குக் கொடூரமான முறையில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தொடர்ந்து மீன்கள் விசித்திரமான முறையில் மடிவதைக் கண்ட உரிமையாளர், சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது இந்த அதிர்ச்சி உண்மை வெளிவந்தது.
இந்த சம்பவம், தாய்லாந்து நாட்டில் நடைபெற்றுள்ளது, 51 வயதான சுத்திக்காய் பூன்லெர்ட் என்ற நபர் கைது செய்யப்பட்டள்ளார்.
வங்காக் காவல்துறையினர் செப்டம்பர் 10 அன்று, துங் சோங் ஹோங் பகுதியில் உள்ள ஒரு தனியார் குளத்தில் கோய் மீன்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் சுத்திசாய் (Sutthichai) என்ற 51 வயது நபரை (டோங் என்றும் அழைக்கப்படுகிறார்) கைது செய்தனர்.
இச்சம்பவம் செப்டம்பர் 7 அன்று நடந்துள்ளது; அவர் மிதிவண்டியில் வந்து, தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, பின்னர் குளத்திற்குள் நிர்வாணமாக இறங்கி மீன்களுக்குத் தொல்லை கொடுத்துள்ளார். வீட்டுப் பணியாளரும் உரிமையாளரும் அவரை எதிர்கொண்டபோது அவர் தப்பியோடிவிட்டார், பின்னர் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணை அதிகாரிகள் அடுத்த நாள் லாக் சி பகுதியில் சுத்திசாய் கண்டறிந்தனர்;
அப்போது அவர் சம்பவத்தின் போது அணிந்திருந்த அதே ஆடைகளை அணிந்திருந்தார். அவர் தப்பியோட முயன்ற போதிலும் கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது, அவர் இச்செயலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்; தான் குளிக்கச் சென்றதாகவும், மீன்களைப் பார்த்தவுடன் தனக்குத் தூண்டுதல் ஏற்பட்டதாகவும் கூறினார்.
அத்தினத்தன்று இரவில் கோய் மீன்களுக்கு இருமுறை தொல்லை கொடுத்ததாகவும், கடந்த காலங்களில் பிற விலங்குகள் மற்றும் பொருட்களுடனும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதையும் ஒப்புக்கொண்டார்.
ஏழு முதல் எட்டு ஆண்டுகளாகக் கோய் மீன்களை வளர்த்து வருவதாகவும், மீன்கள் வளைந்த உடல்களுடன் இறந்து கிடப்பதைக் கவனித்து ஆரம்பத்தில் சண்டைகள்தான் காரணம் என்று நினைத்ததாகவும் குளத்தின் உரிமையாளர் பாபி தெரிவித்தார்.
குளத்திற்கு அருகில் ஒரு பாலியல் பொம்மை கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து சந்தேகம் வலுவடைந்துள்ளது; இதனால் அவர் சிசிடிவி கேமராக்களைச் சரிசெய்தார், அதன் பின்னர்தான் அந்தத் துஷ்பிரயோகம் கேமராவில் பதிவாகியுள்ளது தெரியவந்தது. விலங்கு வதை, சொத்து சேதம், ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபடுதல் மற்றும் இரவில் அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பரிசீலனையில் இருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.


