புத்தளம், நவகத்தேகம, கெலேவெவ பகுதியில் காட்டு யானை தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் நவகத்தேகம, கெலேவெவ பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய வயோதிபர் என தெரியவந்துள்ளது.
இந்த வயோதிபர் 2 ஏக்கர் தென்னந்தோப்பில் தனியாக வசித்து வந்துள்ள நிலையில் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த வயோதிபரின் சகோதரன் தென்னந்தோப்பில் வைத்து வயோதிபரின் சடலத்தை கண்டுள்ள நிலையில் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


